×

ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட அந்த விஐபி யாரு?- பொன்.மாணிக்கவேல் பரபரப்பு

 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் திருத்தணி முருகன் கோயில் பணத்தை சிற்றுண்டிக்காக ரூ. 6.13 லட்சம் முறைகேடாக  பயன்ப்படுத்திய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆலையம் காப்போம் அமைப்பின் சார்பில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  முன்னாள் ஐஜி  பொன் மானிக்கவேல்  திருத்தணி காவல் நிலையத்தில்  புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பப்டுத்தியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி யாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன் மானிக்கவேல் மற்றும் ஆலையம் காப்போம் அமைப்பின் நிர்வாகிகளுடன்  திருத்தணி காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தில் ஆய்வாளர்  மதியரசன் புகார் மனு வழங்கிய பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி   அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது  முக்கிய பிரமுகர்கள், உயர் அரசு அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டிக்காக  திருத்தணி முருகன் கோயில் பணத்திலிருந்து  ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 657 ரூபாய்  முறைகேடாக  செலவு செய்ததாக,  இக் கோயில் செயல் அலுவலர் ஆவனத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்.