×

குண்டர் சட்டம் பாய்ந்ததால் கைதி தற்கொலை

 

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் தஞ்சை சேர்ந்த வெற்றிவேல் என்கிற கைதி திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாலும், அவர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை அவர் சிறை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக கைதிகள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெற்றி வேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிவேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கே.கே நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக கைதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது