×

 #Rahulgandhi அனல் பறக்கும் தேர்தல் களம் - தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி 
 

 

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்.12ல் ராகுல்காந்தி பிரச்சாரம்  மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏப்.12ல் தமிழகத்திலுள்ள நெல்லை, கோவையில் பிரசாரம்  செய்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார் என்பது கூடுதல் தகவல். ராகுல்காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.