×

மதியம் 1 மணிவரை 11 மாவட்டங்களில் மழை

 

தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. 

இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் ,திருச்சி, புதுக்கோட்டை ,ராமநாதபுரம், தேனி ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.