×

குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்களை மீட்ட தமிழக அரசு - ராமதாஸ் வரவேற்பு!

 

குவைத்தில் தவித்த 20  தமிழ் இளைஞர்களை மீட்ட தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், குவைத்தில் வேலைக்கு சென்று  ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.