×

4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு

 

அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மிக விரைவில் வெளியிடவுள்ளது என்று முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

வரும் 28ம் தேதி முதல் ஏப்.29ம் தேதிவரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.