×

சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

 

சிறையில் சவுக்கு சங்கரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் சராமரியாக தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் , காவலர்கள் குறித்தும் அவதூறாக கருத்தை தெரிவித்த காரணத்தினால் கோவை சைபர் கிரைம் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் . தேனி விடுதி  ஒன்றில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கரை போலீசார் அதிரடியாக கைது செய்து , கோவை அழைத்து வந்தனர்.  கோவை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுக்கு சங்கரை 5 போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.