தமிழீழ நாட்டின் தன்னிகரற்ற தளபதி சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் - சீமான்
Nov 2, 2023, 09:56 IST
தமிழீழ நாட்டின் தன்னிகரற்ற தளபதி சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி. தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!