×

தீபாவளி பண்டிகை - சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

 

தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வடைவார்கள். தீபாவளி நோன்பு  திங்கள் அன்று கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.  நவ.10, 12ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல் நவ.11, 13ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ.10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) சிறப்பு கட்டண ரயில் (06061) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு கட்டண ரயில், இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதேபோல் சென்னை- நெல்லை இடையே நவம்பர் 9 ஆம் தேதி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கும் நெல்லையில் இருந்து பிற்பகல் 6 மணிக்கும் புறப்படுகிறது.