×

10 ரூபாய் கடலையை ஓசியில் கேட்டு மிரட்டி வாங்கி சாப்பிட்ட எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

 

திருச்சியில் கடலை வியாபாரியிடம் பணம் கொடுக்காமல் கடலையை  மிரட்டி வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் மறைமுகமாக செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராதா மிரட்டி கடலையை வாங்கி சென்றது தெரியவந்து. அதனை அடுத்து அவரை பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.