×

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா புயல்’.. 14ம் தேதி கரையைக் கடக்கும் என தகவல்..

 


வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது.

வங்கக்கடலில் உருவான மோக்கா புயல்  மாலை 5.30 மணி அளவில்  தீவிர புயலாக மாறியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மே 14ஆம் தேதி முற்பகலில்  தென்கிழக்கு வங்கதேசம் - மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் வங்காளவிரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு   மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.