×

காங். நிர்வாகி திட்டமிட்டு கொலையா? 30 பேருக்கு சம்மன்

 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட்டார். குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்த 30 ஆம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில் ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.