×

#Modi தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது- பிரதமர் மோடி

 

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
"கோவை மக்கள் என்னை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட் ஷோ பல ஆண்டுகளுக்கு என் நினைவில் இருக்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த ஆசீர்வாதங்கள் பெரிதும் போற்றப்படுகின்றன"என்று குறிப்பிட்டுள்ளார்.
 அதனை தொடர்ந்து மற்றொரு பதிவில் " தமிழகத்தின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது.
 எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனியும் திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை". என்று பதிவிட்டுள்ளார்.