×

பவதாரணி உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் - தமிழிசை இரங்கல்!

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில், இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.