×

மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்!

 

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரண நிதி வழங்கவில்லை என தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு பதில் அளிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.