வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!
Jan 27, 2024, 09:37 IST
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் ஆசிரியர் நாயகி 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருகியுள்ளார்.
காதை திருகியதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட கோரம் நிகழ்ந்துள்ளது. மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனை ஆசிரியர் தாக்கியதில் ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.