×

நீட் விலக்கு பற்றி பேசிய விஜய்க்கு நன்றி

 

சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய் , நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் தமிழ்நாட்டில் கிராமப்புற, பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது.  தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வுநீட் விலக்கு தொடர்பாக உடனே எதுவும் நடக்காது; அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள். எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன்; ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன் நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நாடு முழுவதும் நீட் தேர்வே தேவையில்லை என்றார்.
 

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரான திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்த போது, நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் திமுக மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்துக் கட்சிகளும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்க ஆரம்பித்துள்ளது. நிச்சயமாக மாற்றம் வரும். நீட் விலக்கு பற்றி பேசிய விஜய்க்கு நன்றி; நீட்டிற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் விஜய் என்றார்.