×

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்தியதால் விபரீதம்... கோயிலுக்குள் பாய்ந்த கார்! 

 

பூஜை போட வந்த புதிய கார் கோயிலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் தான் புதிதாக வாங்கிய மாருதி சுசுகி ஈகோ வாகனத்துடன் வந்துள்ளார். அப்போது காருக்கு பூஜை போடுவதற்காக கோயில் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய உள்ளே சென்றுள்ளார்.