×

ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு - கே.பாலகிருஷ்ணன் 

 

ஆளுநர் தேனீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தேனீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை !

இப்போது நடைமுறையில் இருந்துவரும் ஆளுநர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. ஒன்றிய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.