“வேலைக்கு லாயக்கில்லை, வாய்க்கும் குறைச்சலில்லை”- சேகர்பாபுவுக்கு பாஜக கண்டனம்

சாவகாசமாக சொகுசு காரில் வந்திறங்கி, அதிகாரமாக சிறப்பு பாதையில் இறைவனை சென்று தரிசிக்கும் உங்களுக்கு, அதே இறைவனைக் காண சாதாரண வரிசையில் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருக்கும் சாமானியனின் வலி எப்படி புரியும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தனது எக்ஸ் தள பக்கத்தில், “வேலைக்கு லாயக்கில்லை, வாய்க்கும் குறைச்சலில்லை அமைச்சர் திரு. சேகர்பாபு...திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்த பக்தர்களை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி ஆட்டு மந்தையில் அடைப்பது போல 5 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து விட்டு, சிறு குழந்தைகள் பசியாலும் கூட்ட நெரிசலாலும் மயங்கி விழுவதைப் பற்றி துளியும் கரிசனமின்றி, அங்கே சிக்கித் தவிப்பவர்களைக் கண்டு “திருப்பதியில் 24 மணி நேரம் நிப்பான், இங்க நிக்க மட்டும் வலிக்குதா” என்ற தொனியில் மக்களை மட்டம் தட்டிய இந்து அறநிலையத் துறை அமைச்சரின் விட்டேத்தியான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.