×

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது வன்மையாக கண்டிக்கதக்கது - நாராயணன் திருப்பதி

 

போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தற்கு எதிராக போராடி கொண்டிருக்கிற அப்பாவி விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முனைந்துள்ள தி மு க அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ள போராடுவதற்கு உரிமையுள்ள விவசாயிகளை ஃபாஸிச தி மு க அரசு அச்சுறுத்தி பார்ப்பது ஜனநாயக விரோத செயலாகும். எதிர்க்கட்சியாக இருந்த போது பல்வேறு விவகாரங்களில் விவசாயிகளின் தோழன் போல் வேடமிட்டு அரசுக்கு எதிராக கலகம் விளைவித்த தி மு க, ஆளும் கட்சியான பிறகு அடக்குமுறையை அவிழ்த்து விடுவது கொடுஞ்செயல்.