×

TNSTC பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு செல்லாது

 

நாளை முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து மட்டுமே தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடங்களும்  கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன. ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக  வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து அனைத்து போக்குவரத்து கழகங்களை  (TNSTC) சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகளும் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். 160 பேருந்துகளின் நடைகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் 30/1/2024 முதல் இயக்கப்பட மாட்டாது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது,  தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட குறிப்பின் படி மக்கள் பயணிக்கும் படி போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.