×

பத்திரிகையாளர் சகோதர, சகோதரிகளுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசன்

 

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் நாட்டின் மாண்புகளை கட்டிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் ஊடக துறையினர் மற்றும் பத்திரிகை துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பத்திரிகையாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.