×

பத்திரிக்கையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- விஜயபாஸ்கர்

 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குண்டர்கள் தம்மை பின் தொடர்வதாக காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.