×

பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்..!

 

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1-ம் தேதி அமலாகிறது. இந்திய அரசியலமைப்பின் 348-வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த  18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 146 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம். எனவே இந்த மூன்று சட்டங்களையும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு  அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.