×

விரைவில் 100 மில்லி பாட்டிலில் மது விற்பனை..?

 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் குரல் எழுந்தாலும், அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்க முடியாததால்தான் இது போன்று விஷ சாராயங்களை குடிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

எனவே, எனவே தமிழக அரசும், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் அரங்கேறின.அப்போது 100 மில்லி ரூ.15 என்ற மலிவு விலை மது விற்பனை தொடங்கப்பட்டு நாளடைவில் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம் என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, . ஆனால் அதற்கான நிலை தற்போது இல்லை என்றும் கூறினார். நமது பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது போது நாம் மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

எனவே, தமிழகத்தில் மது விலக்கு இப்போது இல்லை என்ற நிலையைதான் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

எனவே 100 மில்லி கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா என்றும் பரிசீலித்தது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்று தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாகவும், அரசு முடிவெடுத்தபின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.