×

உதட்டில் கடித்த பாம்பை கடித்து துப்பிய சிறுமி!

 

 உதட்டில் கடித்த பாம்பை மடக்கிப்பிடித்து கடித்து துப்பி இருக்கிறார் இரண்டு வயது சிறுமி.   சிறுமியின் வாயில் அகப்பட்டு உயிருக்கு போராடிய அந்த பாம்பு தப்பிக்க முடியாமல் உயிரிழந்திருக்கிறது.  வாய் முழுவதும் ரத்தத்துடன் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சிறுமி. 

பாம்பு கடித்து விட்டால் சிலர் பயந்து நடுங்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்று விடுவர்.   துணிச்சலான சிலர்தான் கடித்த பாம்பு என்னவென்று மருத்துவருக்கு காட்ட அந்த பாம்பையே பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்கள்.   வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தான் கடிக்க வந்த பாம்பை கடித்து துப்பிய சம்பவம் நிகழ்ந்ததுண்டு .  ஆனால் இரண்டு வயது சிறுமி தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்று துப்பி இருக்கிறார்.  

 மேற்காசிய நாடான துருக்கியில் கண்டூர் என்கிற கிராமத்தில் வசித்து வந்த இரண்டு வயது சிறுமி வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது அங்கு வந்த பாம்பு சிறுமியின் உதட்டை கடித்து இருக்கிறது.  இதில் கோபப்பட்ட சிறுமி பதிலுக்கு அந்த பாம்பை மடக்கி பிடித்து கடிக்க துவங்கி இருக்கிறார்.   இதில் சிறுமியிடம் சிக்கி அந்த பாம்பு தப்பிக்க போராடி இருக்கிறது.  ஆனால் சிறுமி விடவே இல்லை.  அந்த பாம்பை கடித்து துப்பி இருக்கிறார்.

இதில் அந்த பாம்பு இங்கேயே உயிரிழந்திருக்கிறது.  கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்க்க வந்திருக்கிறார்கள். குடும்பத்தினர் அப்போது சிறுமி வாயில் ரத்தத்துடன் இருந்திருக்கிறார்.  அருகில் பாம்பு இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  உடனே சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கிறார்கள்.  அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நல்ல வேளையாக சிறுமியை கடித்த அந்த பாம்பு விஷமற்றது என்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.