தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 449 புள்ளிகள் அதிகரிப்பு

 
இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 449 புள்ளிகள் அதிகரித்தது.

சீனாவின் மானுபாக்சரிங் புள்ளிவிவரம் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்தது, கடந்த ஜனவரியில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது, அதானி பங்குகளின் எழுச்சி போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எஸ்.பி.ஐ. மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,446  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,050  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 130 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.93 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 448.96 புள்ளிகள் உயர்ந்து 59,411.08 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 146.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,450.90 புள்ளிகளில் முடிவுற்றது.