தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. சவரனுக்கு ரூ. 152 குறைந்திருக்கிறது...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ஒரு சவரன் ரூ. 38,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை சிறந்த புகலிடமாக கருதுகின்றனர். தங்கத்தின் மீதான் முதலீட்டை சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் கருதுகின்றனர். ஆகையால் தங்கத்தின் மவுசு கூடி, அதன் விலையும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. அப்படியே ஏதோ ஒரு நாள் விலை குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் விலை அதிகரித்து விடுகிறது. இருப்பினும் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் கடந்த வார இறுதியில் ( மே 7 ஆம் தேதி) தங்கம் விலை அதிரடியாக 39, ஆயிரத்தை தாண்டி விற்பனையானது . அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,877க்கும், ஒரு சவரன் ரூ. 39,016 க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று, ஒரு கிராம் 4,859 ரூபாய்க்கும், 38,872 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாயும், சவரனுக்கு ரூ. 152 குறைந்திருக்கிறது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,840 க்கு விற்பனை செய்யப்படுகிறத். 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 38,720 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் சரிவை சந்தித்திருக்கிறது. சென்னையில் நேற்று 66 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று 66 ரூபாயாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.