காகித வடிவ தங்கம் - முதலீட்டுக்கான சிறந்த திட்டம்...

 
தங்கம்

இன்றைய காலக்கட்டத்தில் தங்கம் ஆபரணங்களாக மட்டுமில்லாமல் முதலீட்டுக்கான ஒரு முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அருமையான திட்டம் தான் தங்க பத்திரம்..

காகித வடிவில் தங்க மூதலீடு திட்டம் நாளை(நவம்பர் 29)  தொடங்குகிறது. இந்த தங்க பத்திரங்களை வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை  ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. முதலீடு செய்யக்கூடிய தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

1

டிசம்பர் 7 ஆம் தேதியுடன்  தங்கப் பத்திர விற்பனை முடிவடைகிறது. ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராமுக்கு தங்கப் பத்திரம் வாங்க வேண்டும். அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம். தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதுபோக ஆண்டுக்கு 2.5% வட்டி , 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

2


தங்க நகையாக வாங்கும்போது செய்கூலி செலுத்துகிறோம். ஆனால், தங்கப் பத்திரத்தில் அந்தப் பிரச்சினையும் இல்லை. ஆக, நிஜத் தங்கத்தை வாங்காமலேயே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பெற விரும்புவோர் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மேலும் 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.