வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3 - கமல்ஹாசன்

 
kamal

சந்திரயான் 3  விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக  சந்திரயான்- 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது.  ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் சரியாக  இன்று மதியம் 2.35 மணி 17 வினாடிக்கு  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்  விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து  ஏவப்பட்டது.  விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் .  7 ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய சந்திராயன் 3 விண்கலத்தின் மொத்த விடை 3900 கிலோ ஆகும்.  பூமியிலிருந்து 3.84  லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும். நிலவில் தரையிரங்கிய பின்னர்  நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3  விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் மூலம்  நிலவை ஆய்வு செய்யும் 4வது நாடு என்கிற பெருமையையும், நிலவின் தெந்துருவ பகுதியை ஆய்வு செய்யும் முதல்நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெருகிறது.  


இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாயுவில் சாடி ஒரு வானவெளிப் பயணம். நிலவை நோக்கி நீள்கிறது மனித எத்தனம். வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.