‘தக் லைஃப்’ ப்டத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல - சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

 
 ‘தக் லைஃப்’ ப்டத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல - சுப்ரீம் கோர்ட் கருத்து..!!  ‘தக் லைஃப்’ ப்டத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல - சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

“தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும்,  சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. 

நடிகர்கள்  கமல்ஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்ட  பலர் நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம்   ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை.  இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு  விழா மே 30ம் தேதி சென்னையில் நடைபெற்றபோது, தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என கமல்ஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் திரையிட கூடாது திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. மேலும் திரைப்படம் திரையிட்டால் திரையரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படும் என கன்னட அமைப்புகள் சிலவும் எச்சரித்தனர்! 

thug life

 இந்நிலையில் தக் லைஃப் திரைப்பட தடை உத்தரவுக்கு எதிராக மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இவ்வழக்கு கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்ற தேர்வு விசாரணைக்கு வந்தபோது கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர். 

இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு, குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் நம்முடைய அரசியலமைப்பு விதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது எனவும், எவர் ஒருவரும் தனது திரைப்படத்தை வெளியிட உரிமை உண்டு அதே நேரத்தில் மக்கள் அத்திரைப்படத்தை பார்த்து முடிவு செய்யட்டும் என கருத்து தெரிவித்தார். 

thug life

அதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பு ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரம் மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  அதற்கு நீதிபதிகள், ஒரு திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்று இருந்தால் அதனை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையிடுவதற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியதோடு , சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார்போல் நடக்கக்கூடாது என அறிவுறுத்தினர். 

மேலும் தக் லைப்" திரைப்படத்தை திரையிடும் விவகாரம், பாதுகாப்பு விவகாரம் தெடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு தனது கருத்தை, நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், அது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று  கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும் சிலர் அச்சுறுத்துவதால் ஒரு திரைப்படம் வெளியிடப்படாமல் இருப்பது ஏற்க முடியாது என்றும், திரைப்படத்தை வெளியிட CBFC சான்றிதழ் பெற்ற பின்னர் படத்தை திரையிடக்கூடாது என தடுக்க முடியாது எனவும், படம் வெளியான பிறகு பொதுமக்கள் படத்தை பார்க்காமல் கூட இருக்கலாம், ஆனால் அதற்காக படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.