சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு.. சோகத்தில் ரசிகர்கள்..

 
சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு.. சோகத்தில் ரசிகர்கள்..

சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளதால், அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.  

தமிழ் சினிமாவில் செல்ல நாயகன் என்றால் சிவகார்த்திகேயனை சொல்லலாம்.. திரையுலகில் கால் பதித்த சில ஆண்டுகளிலேயே உச்ச நட்சத்திரம் என்கிற புகழை தொட்டார்.  மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, வேலைக்காரன்,  சீமராஜா, டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகிவிட்டார்.  இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

sivakarthikeyan

இதனைத்தொடர்ந்து  தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகியிருக்கப் போவதாக  அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படங்கள் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.