"டேய் உன்னை லவ் பண்ணலேன்னா ,இப்படியா பண்ணுவே" -தனியா இருந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

 
love

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர் .

murder

தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே கோக்கன்னகர கிராமத்தை சேர்ந்த 20 வயதான அஞ்சலி தன் தந்தையை இழந்துவிட்டு  தாய் லட்சுமியுடன் வசிக்கிறார் ,அவர் அங்குள்ள ஒரு பண்ணையில்  கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
தாய் இல்லாத நேரத்தில் அஞ்சலி வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த, அதே ஊரை சேர்ந்த வாலிபர் ராஜூ .அந்த பெண்ணிடம் நண்பனாக இருப்பது போல் பழகி அவரை நம்ப வைத்தார் .பின்னர் அவரிடம் அவரை காதலிப்பதாக கூறி கல்யாணம்  செய்து கொள்வதாக கூறினார் .ஆனால் அந்த பெண் அவரை விரும்பாததால் இது பற்றி தன்  தாயிடம் கூறினார் .அதை கேட்ட அந்த தாய் ஊர் பஞ்சாயத்தில் தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேடுவதாக கூறி அந்த ராஜூவை விரட்டி விட்டார் 

இது பற்றிய தகவல் அறிந்த ராஜு , அஞ்சலிக்கு போன் செய்து நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு அஞ்சலியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத காரணத்தால் கத்தியுடன் அங்கு சென்ற ராஜூ, அஞ்சலியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவரை கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .பிறகு போலீசார் தகவலறிந்து அந்த பெண்ணை கொன்ற ராஜூவை கைது செய்தனர் .