"கர்ப்பமாயிருக்கும்போது கூட கண்டவனோட பேசுறியே " -காண்டான கணவனால் நடந்த கொடூரம்

 
rape

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவி,மற்றும் பக்கத்து வீட்டு காரர்களையும் படுகொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். 

murder
.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா நவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரய்யா.  மகாேதவம்மா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது மகாதேவம்மா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். 
இந்நிலையில் அந்த ரெண்டாவது மனைவி அடிக்கடி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபரோடு பேசிவந்தார் .இதனால் அந்த ஈரையாவுக்கு அந்த மனைவிக்கு பக்கதது வீட்டு வாலிபரோடு கள்ள தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டார் .இதனால் அவர் தன் மனைவியோடும் பக்கத்து வீட்டு காரர்களோடும் அடிக்கடி சண்டை போட்டார் .
அதனால் ஒரு நாள் அந்த பக்கத்து வீட்டு வாலிபரின் பெற்றோர் வந்து, அந்த ஈரய்யாவிடம் சமாதானம் பேசி ,தாங்கள் நினைப்பது போல உங்கள் மனைவியோடு தங்களின் மகனுக்கு எந்த கள்ள உறவுமில்லை என்று கூறினர் .ஆனால் அதை நம்பாத அந்த ஈரய்யா அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து குடிபோதையில் அவரின் கர்ப்பிணி மனைவி மற்றும் அந்த பக்கத்து வீட்டு தம்பதிகள் ஆகியோரை கொலை செய்துவிட்டார் .பின்னர் போலீசுக்கு இந்த மூன்று கொலைகள் பற்றி தகவல் கிடைத்ததும் அவரை கைது செய்தனர் . இவர் ஏற்கனவே முதல் மனைவியை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .