14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 63,69 வயது தாத்தா, பெரியப்பாவுக்கு ஆயுள்

 
r

14 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 63 வயது பெரியப்பாவுக்கும்,  69 வயது தாத்தாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 63 வயது கொண்ட  பெரியப்பாவும்,  69 வயதான தாத்தாவும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.   இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ee

 கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   அறந்தாங்கி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

 வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்து நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்து இருக்கிறார்.   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  அந்த சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  மற்றொரு முதியவருக்கு ஆயுள் தண்டனையும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 நீதிபதி இந்த அபராத தொகையை  ஐந்து லட்சம் ரூபாயில் சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசு சார்பில் திறமைக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.