16 வயது சிறுமியை மயக்கமருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ எடுத்து சித்ரவதை!
துப்புரவு பணியாளரின் 16 வயது மகளை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 33 வயது வாலிபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் ஷகிலா. இவருடைய 16 வயதுடைய மகள் திருவொற்றியூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மயக்கம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனது வீட்டு அருகில் வசிக்கும் ராஜ் என்பவர் கூல்டிரிங்ஸில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து அதனை காட்டி பலமுறை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் அதனை தெரிந்துகொண்ட ராஜ், கருவை கலைப்பதற்கு தனியார் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டதால் மயக்கமாக இருப்பதாகவும் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜ் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை கேசவன் தெருவில் உள்ள வழக்கறிஞரை பார்ப்பதற்காக நின்று கொண்டு இருந்த ராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.