மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் 17 வயது சிறுவன் அடித்துக் கொலை
திருவெண்னைய் நல்லூர் அருகே மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் 17 வயது பள்ளி மாணவன் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 17 வயது பள்ளி மாணவன் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார். அப்போது சுப்பிரமணி மனைவி பூபதிக்கும் விக்னேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சுப்பிரமணி, அவரது மகன் அஜித் பூபதி ஆகியோர் தடியால் அடித்து தாக்கியதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விக்னேசை அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து அதன்பிறகு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விக்னேசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை சம்பவம் தொடர்பாக விக்னேசின் தந்தை வீரப்பன் திருவெண்னைய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மூன்று பேரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன


