65வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 19 வயது இளைஞர் கைது

 
p


 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.  கருவேலங்காட்டுக்குள் கிடந்த சடலத்தை மீட்ட  போலீசார் இளைஞரை கைது செய்துள்ளனர். 

 திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் அடுத்த செந்துறை.  இப்பகுதிக்கு அருகே உள்ள உள்ளது ரங்கைய சேர்வைக்காரன் பட்டி.  இந்த பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் மனைவி பெரியம்மாள்.   65 வயதான இந்த மூதாட்டி வீட்டிற்கு எதிரே இருக்கும் கருவேலம் காட்டில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்.

r

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தியதில்,  மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது.  இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  இதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று மூதாட்டி வசித்த அதே பகுதியைச் சேர்ந்தவரும் மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வசிப்பருமான சரவணகுமார் என்கிற 19 வயது இளைஞர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

 சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது.   கருவேலங்காட்டில் பெரியம்மாளை பாலியல் வன்கடுமை செய்து கொலை செய்து பின்னர் மூக்குத்தியை பிடுங்கிச் சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.   இதன் பின்னர் சரவணகுமார் இடம் இருந்து மூக்கியத்தியை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்.