மகளை பலாத்காரம் செய்ய வைத்து 8 முறை கருமுட்டை விற்பனை -கள்ளக்காதலனுடன் கொடூரத்தாய் கைது
பெற்ற மகளை கள்ளக்காதலனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து தொடர்ந்து கருமுட்டை விற்பனை செய்து வந்திருக்கிறார் அந்த கொடூரத்தாய். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனை செய்து வந்ததில் போலீசில் சிக்கியிருக்கிறார்கள்.
ஈரோட்டில் 38 வயதாகும் அந்த பெண்ணுக்கு 16வயதில் மகள் உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார் அந்த பெண். மகளுடன் வாழ்ந்து வந்த அந்த பெண்ணுக்கு ஈரோட்டை சேர்ந்த 40 வயதுடைய பெயிண்டருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. அவருடன் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்திருக்கிறார் அந்த பெண். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காதலனுடம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.
தன் மகளையும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார் அந்த பெண். அதனால் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பெயிண்டர். இப்படி 8 முறை பலாத்காரம் செய்து கருமுட்டை விற்பனை செய்திருக்கிறார்கள்.
சிறுமி என்பதால் கருமுட்டை விற்ககூடாது என்பதால், போலி ஆவணங்கள் மூலம் வயதை கூட்டி காட்டி ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.
ஒரு கருமுட்டைக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாளுக்கு தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தொல்லை தாங்கமுடியவில்லை என்பதால் சேலத்தில் உள்ள உறவினர் மூலம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகாரளிக்க, சிறுமியின் தாய், கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.