வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமி பலாத்காரம்
வாழைப்பழமும் சிப்சும் கொடுத்து ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இக் கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வந்திருக்கிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கூலி வேலை செய்யும் இந்த தம்பதியினர் மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்று இருக்கிறார்கள். இதை நோட்டமிட்ட மணிஸ் இந்த தம்பதியினர் கூலி வேலைக்குச் சென்றதும் தனியாக இருந்த சிறுமியிடம் வாழைப்பழம் , சிப்ஸ் கொடுத்து பேசிக்கொண்டிருக்கிறார் .
அப்போது திடீரென்று அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் . பெற்றோர் வந்தவர் இதைச் சொல்லி அச்சிறுமி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
புகாரின் பேரில் போலீசார் மனிஸ் மீது போட்டோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மனிஷிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள்.