மகளின் சமாதிக்கு அருகே காதலனை கொன்று புதைத்த தந்தை

 
h

மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொன்று மகளின் சமாதிக்கு அருகே புதைத்து சமாதியாக்கி இருக்கிறார் தந்தை.   ஆந்திராவில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 ஆந்திர மாநிலத்தில் துவாரகா லட்சுமி புறத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண்.  24 வயதான இந்த வாலிபர் கொடுங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மரிது சியாமளா என்கிற 18 வயது இளம் பெண்ணை ஜங்காரெட்டிகுடேத்தில் படித்தபோது காதலித்து வந்திருக்கிறார். 

 சில தினங்களுக்கு முன்பு இருவரும் அவரவர் வீட்டில் இது குறித்து சொல்லியிருக்கிறார்கள்.   இதற்கு இரு விட்டாரும் சம்மதிக்கவில்லை.   இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இது வீட்டாருமே இவர்களின் காதலை ஏற்கவில்லை.   இதனால் இருவரும் மனமடைந்து இருந்துள்ளனர். 

b

 இந்த விவகாரத்தால் கல்லூரி படிப்பை தொடரவும் அந்த மாணவிக்கு பெற்றோர் அனுமதி மறுத்துள்ளனர்.   இதில் மன உளைச்சலுக்கு ஆளான சியாமளா கடந்த ஐந்தாம் தேதி அன்று விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  மகளின் தற்கொலையால் தந்தையும் அவரது குடும்பமும் மனமுடைந்து போயிருந்தார்கள். தனது மகளின் மரணத்திற்கு காரணமான காதலனையும் கொன்று மகளின் சமாதிக்கு அருகே புதைத்து விட வேண்டும் என்று ஆத்திரம் கொண்டிருக்கிறார் நாகேஸ்வரராவ்.

இந்த நிலையில்,   கடந்த 15 ஆம் தேதி நடந்த விருந்தில் பவன் கல்யாண் நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார்.   அந்த விருந்து முடிந்த பின்னர் பவன் கல்யாண் காணாமல் போய் இருக்கிறார்.   இதை அடுத்து பவன் கல்யாண் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.   பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள் .

விசாரணையில் பவன் கல்யானை சியாமளாவின் தந்தை நாகேஸ்வரராவ் விருந்து முடித்ததும் அழைத்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில்,  பவன் கல்யானை கொலை செய்து தன் மகளின் சமாதிக்கு அருகில் புதைத்து சமாதி கட்டியதாக தெரிவித்து இருக்கிறார். அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

நாகேஸ்வரராவ் அளித்த வாக்குமூலத்தின் படி புதைக்கப்பட்ட பவன் கல்யாண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்துள்ளனர் போலீசார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.