கருக்கலைப்பில் துடிதுடித்து மாணவி உயிரிழப்பு- காதலன் தப்பியோட்டம்
வீட்டுக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்ததில் ரத்தப்போக்கு அதிகமாகி துடிதுடித்து உயிரிழந்துள்ளார் கல்லூரி மாணவி. இதைப்பார்த்ததும் காதலன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடோம் மாவட்டத்தில் பூசுகுடேன் பகுதியைச் சேர்ந்தவர் புக்யா நந்து. இவருக்கும் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் காதல் இருந்து வந்துள்ளது. காதலிப்பதாக சுற்றி வந்தார்,
தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி முதலில் நந்துவின் காதலை ஏற்காமல் இருந்திருக்கிறார். ஆனால் அவரை விடாப்படியாக துரத்தி துரத்தி காதலித்து வந்ததால் அந்த பெண் காதலை ஏற்று இருக்கிறார். காதலை ஏற்றுக் கொண்டு பழகிய சில நாட்களிலேயே அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமடைந்ததால் வீட்டிலும் ஊரிலும் கல்லூரியிலும் அவமானமாக போய்விடும் என்று காதலனிடம் புலம்பி இருக்கிறார். இதனால் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைக்கு காதலியை அழைத்து சென்றிருக்கிறார். அங்கு காதலி என்று சொல்லாமல் மனைவி என்று சொல்லி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். மருத்துவர்களும் கணவன்- மனைவி என்று நம்பி அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்திருக்கின்றனர். மருத்துவர் அளித்த சிகிச்சையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இதை தெரிந்து கொண்ட காதலன் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி இருக்கிறார். சிகிச்சையில் ரத்தப்போக்கு அதிகமாகி துடி துடித்து உயிரிழந்திருக்கிறார் மாணவி. அதன் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து வந்த இளைஞரை மருத்துவர்கள் தேடியிருக்கிறார்கள். அப்போதுதான் அவர் மாயமாகிவிட்டார் என்று தெரிய வந்திருக்கிறது .
உடனே போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். கல்லூரிக்கு சென்ற மகள் கருக்கலைப்பு செய்யப்பட்டபோது உயிரிழந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுத பெற்றோர் மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறார்கள்.
அந்த இளைஞர் குறித்து மருத்துவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை பிடிக்க தேடி வருகின்றனர்.