கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கொன்று தூக்கில் தொங்க விட்ட வாலிபர்
வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதன் பின்னர் கழுத்தை நெரித்திக் கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தூக்கில் தொங்கவிட்டு தப்பியோடி இருக்கிறார் வாலிபர். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாக்குல சிஸாம் என்கிற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் அந்த 19 வயது கல்லூரி மாணவி. சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரது தந்தை வேலையின் காரணமாக மெயின்புரிக்கு சென்றிருக்கிறார். மாணவியின் தாயார் ஆக்ராவிற்கு சென்று இருக்கிறார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்.
இதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர் அந்த மாணவியின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அந்த மாணவியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பின்னர் தன்னை அந்தப் பெண் காட்டிக் கொடுத்து விடுவார் என்கிற அச்சத்தில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் அந்த இளம் பெண்ணை தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.
பயிற்சி வகுப்புக்காக வெளியே சென்றிருந்த அந்த இளம் பெண்ணின் சகோதரி மாலையில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வாலிபர் ஒருவர் தனது அக்காவை கழுத்தை நெரித்திக் கொன்று தூக்கில் மாட்டுவது தெரிய வந்தது . கதறி இருக்கிறார். உடனே அவர் போலீசுக்கு போன் செய்திருக்கிறார். அதற்குள் அந்த வாலிபர் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மாணவியின் சகோதரியிடம் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர் புஷ்பேந்திரா என்கிற 20 வயது இளைஞர் என்பது தெரிய வந்திருக்கிறது. கொலையை நேரில் பார்த்த சாட்சி இருப்பதால் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.