காதல் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்திய இளைஞர் கொன்று எரிப்பு

 
f

 காதல் திருமணம் செய்த வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நடந்துள்ளது இந்த அதிர்ச்சி சம்பவம். 

 ஆந்திர மாநிலத்தில் கர்னூல்  மாவட்டத்தைச் சேர்ந்த அல்வா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ்.   26 வயதான இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.   இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.   இந்த எதிர்ப்பினால் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அருணாவை திருமணம் செய்து இருக்கிறார் ஆமோஸ். 

ஃபி

 இருவரும் கர்னூலில் வேலை பார்த்து தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள்.   தம்பதிக்கு நாலு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது .  இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக ஆமோசை திடீரென்று காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் கர்னூல் மாவட்டத்தின் ஆற்றங் கரை அருகே அடர்ந்த புதர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.  போலீசாரின் விசாரணையில் அதில் காணாமல் போன ஆமோஸ் உடல் என்பது தெரிய வந்திருக்கிறது.

 போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்திருக்கிறது . வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் ஆமோஸ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.