மனைவியை கொன்றதை பார்த்ததும் தப்பியோடிய மகனை துரத்தி சரமாரியாக வெட்டி கொன்ற தந்தை

 
dஅ

மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்றதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மகன்கள் தப்பியோடு இருக்கிறார்கள்.   அவர்களை துரத்திச் சென்ற தந்தை,  ஒரு மகன் தப்பிவிட சிக்கிக்கொண்ட மகனை சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்.   அதன் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   மது போதையில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

 கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டம்.  பங்கனே கிராமத்தைச்  சேர்ந்தவர் ராமா மராத்தி.  40 வயதான கூலிதொழிலாளிக்கு தாக்கி மராத்தி என்கிற முப்பது வயதில் மனைவி இருந்துள்ளார்.   இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் இருந்து உள்ளனர்.  

பொ

 மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ராமா தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி தாக்கி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.   இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு இருந்து வந்திருக்கிறது.   நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு முழு போதையில் வந்திருக்கிறார் ராமா.

 வீட்டுக்கு வந்ததும் அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.  இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.   இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமாவின் இரண்டு மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள் .  அவர்களை பின் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடி இருக்கிறார் ராமா. 

 ஒரு மகன் தப்பி ஓடி விட  லட்சுமணன் என்கிற 12 வயது  மகன் மட்டும் ராமாவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.   பெற்ற மகன் என்றும் நினைக்காமல் லட்சுமணனை சரமாரியாக வெட்டி கொன்றிருக்கிறார் ராமா.   பின்னர் வீடு திரும்பிய ராமா வீட்டில் தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தகவல் அறிந்த  குமட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   குடும்பத் தகராறு காரணமாக போதையில் மனைவி மகனை கொன்று விட்டு ராமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.