பூதலாபுரம் இரட்டைக்கொலை -14 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கடையை மூடிய பிறகும் பீடி, சிகரெட் தராததால் நள்ளிரவில் வீடு புகுந்து இரண்டு முதியவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து இருக்கிறான் அந்த கொடூரன். ஒரே தெருவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த படுகொலைகளால் அதிர்ந்து போய் இருக்கிறது பூதலாபுரம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே பூதலாபுரம் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார் ராஜமாணி அம்மாள்(63). மூதாட்டி ஆன இவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2.30 மணிக்கு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அறிவாளால் வெட்ட முயன்று இருக்கிறார் . அவரிடம் இருந்து தப்பிக்க மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே ஓடி இருக்கிறார். துரத்திச் சென்று நடு ரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார் அந்த நபர். அதே இரவில் அதே பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி பொன்னுச்சாமியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து பூதலாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலையாளி வெள்ளை சட்டை வேட்டி அணிந்து இருந்ததும் ஒரு கால் சாய்ந்து நடந்து சென்றதும் தெரியவந்திருக்கிறது.
இதை வைத்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் அந்த நபர் சுப்பையா(53) என்பதும், கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபர் மீது கடல்குடி போலீசில் நான்கு வழக்கு நிலவையில் உள்ளன என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் போலீசார் சுப்பையாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெட்டிக்கடை நடத்தி வந்த ராஜமாணி அம்மாள் இரவில் கடையை மூடிய பின்னரும் அவரிடம் சென்று பீடி சிகரெட் புகையிலை கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார் சுப்பையா.
இதை ராஜாமணி அம்மாள், முடி திருத்தும் தொழிலாளி பொன்னுசாமி சுப்பையாவை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா இருவரையும் ஓட ஓட விரட்டி படுகொலை செய்து இருக்கிறார் . பூதலாபுரம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியை 14 மணி நேரத்தில் பிடித்து இருக்கும் போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.