அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ய.. தம்பி வீடியோ எடுக்க...102 சிசிடிவி காட்சிகளில் கிடைத்த ஒரு க்ளூ

 
bvc

 அந்தப் பெண்ணை அனுபவிக்க நினைத்ததோடு மட்டுமல்லாமல் அனுபவிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டால் அதை காட்டி மிரட்டி அடிக்கடி அனுபவிக்கலாம் என்று அண்ணன், தம்பி இருவரும் முடிவு எடுத்து அப்படியே செய்திருக்கிறார்கள்.  ஆனால் 102 சிசிடிவி காட்சிகளில் கிடைத்த ஒரு க்ளூ மூலம் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.

 மும்பையில் தாராவி பகுதியில் கணவர், மாமனாருடன் வசித்து வந்துள்ளார் அந்த இளம் பெண்.   திருமணத்திற்கு பின்னர் வேறொரு பகுதியில் இருந்து இப்பகுதியில்   வசித்து வந்துள்ளனர்.   கடந்த மே 11ஆம் தேதி அன்று கணவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரம்,  மாமனாரும் காலையில் நடை பயிற்சிக்காக வீட்டில் இருந்து சென்று விட்டதால் அப்போது வீட்டிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் . அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார்கள்.

gg

 நடைபயிற்சி சென்ற மாமனார் வீடு திரும்பியதும்,   இருவரும் தப்பி ஓடி இருக்கிறார்கள்.   போலீசுக்கு புகார் அளிக்கவும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.   அந்தப் பகுதியில் இருக்கும் 102 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள்.  ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.   அப்போது ஒரு காவலர் மட்டும் ஒரு சிசிடிவி காட்சியில் பதிவில் இருந்து ஒரு சிறிய க்ளூவை காட்டி இருக்கிறார்.   ஒரு இளைஞர் அப்பகுதியில் இருக்கும் கடைக்காரர் ஒருவரிடம் கையே அசைத்து விட்டு செல்கிறார்.  உடனே அந்த கடைக்காரரிடம் சென்று அந்த இளைஞர் யார் என்று விசாரித்த போது,  அவர் பெயர் அனில் சவுகான் என்றும்,   பிரிண்டருக்கு தேவைப்படும்  டோனரை சப்ளை செய்து வருகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

 உடனே அனில் சவுகானை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அது பற்றி அப்படி ஒரு சம்பவம் எதுவுமே தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.  இதன் பின்னர் அனில் சவுகானின் செல்போனை எண்ணை  ஆய்வு செய்ததில்,  அந்த செல்போன் எண்  குறிப்பிட்ட நாளில் சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் இருந்தது தெரிய வந்திருக்கிறது .  

ar

அந்த பெண்ணை பாலில் வன்கொடுமை செய்தது அனில் சவுகான் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார் தானும் சகோதரரும் சேர்ந்துதான்  பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.  அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போனது.  எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் சகோதரருடன் சேர்ந்து திட்டம் போட்டேன். கணவரும் மாமனாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தோம்.   வீடியோ எடுத்து வைத்துக் கொண்டால் அடிக்கடி அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்றுதான் வீடியோ எடுத்தோம் என்றும் சொல்லியிருக்கிறார்.   இதை அடுத்து 19 வயதான அனில் சவுகான்,  20 வயதான நிலேஷ் சவுகானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.