ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்த தாயை கொன்ற மகள்

 
ko

ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என்று கண்டித்த தாயை அந்த ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கிறார் மகள்.

தூத்துக்குடி மன்னார் தெருவில் வசித்து வந்தவர் முனிய லட்சுமி.   கருத்துவேறுபாடு காரணமாக இவரின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.   முனியலட்சுமிக்கு  4 குழந்தைகள்.   இதில் மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை கணவர் மாடசாமி தாமோதரன் நகரில் உள்ள மற்றொரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்திருக்கிறார் முனியலட்சுமி.  இவரின் மகள் பாலிடெக்னிக் படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி இருக்கிறார்.   இந்த நிலையில் முனியலட்சுமியின் மகள் அதே பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி பழகி வந்திருக்கிறார்.   இதை பார்த்த தாய்,  ஆண்களுடன் பழகுவதை கண்டித்திருக்கிறார்.   நண்பர்களுடன் பேசுவதையும் கண்டித்து வந்திருக்கிறார்.

k

 இதனால் இடையூறாக இருக்கும் தாயை கொலை செய்ய நினைத்திருக்கிறார் அந்த 17 வயது சிறுமி.   ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இன்று காலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயை  கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.   பின்னர் இரண்டு ஆண் நண்பர்களும் அங்கிருந்து சென்றதும் போலீசுக்கு போன் செய்து தன் தாயாரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் .

சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் முனிய லட்சுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது மகளே தாயை நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.

 போலீசாரின் விசாரணையில் தன் தாய்   தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் தான் நண்பருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் மகள்.   இதையடுத்து சிறுமியின் நண்பரான முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம்,  தங்கத்தின் நண்பர் ஆகியோரை கைது செய்துள்ளனர் போலீசார்.