"உடலின் பல பாகங்களிலும் உடலுறவு கொண்டு .." -விவாகரத்தான பெண்ணை வன்புணர்வு செய்த வாலிபர்.

 
rape

ஒரு டைவர்ஸ் ஆன பெண்ணை பாலியல் கொடுமை செய்து ,மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்த வாலிபரை போலீஸ் கைது செய்தது .


அசாமில் வசிக்கும் , ஒரு இளம் பெண்ணுக்கு  ஏற்கனவே திருமணமாகி அதன் மூலம் நான்கு வயது மகள் உள்ளார். அதன் பின்னர் அவர் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு ,மீண்டும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் ஆசையில், பிரபல மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன் சுயவிவரத்தை உருவாக்கி,அதில் வெளியிட்டார் . அதன் மூலம் அவருக்கு  பீகாரில் உள்ள திரிவேணிகஞ்ச் பகுதியில் வசிக்கும்  பிரின்ஸ் ராஜ் ஆர்யா என்ற 27 வயதான நபருடன்  இவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டனர், அதன் பிறகு , ஆர்யா அந்த பெண்ணை திருமணம் செய்து,கொள்வதாக கூறி  பீகாருக்கு வருமாறு கூறினார். பின்னர் அந்தப் பெண் தனது மகளுடன் பீகாரின் திரிவேணிகஞ்ச் வந்தவுடன் ,அவர்  ஆர்யாவை  ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்  இதற்குப் பிறகு, அப் பென்னின் இல்லற வாழ்வில்  பயங்கரமான புயல் வீச தொடங்கியது.அந்த ஆர்யா தன்னை இரவெல்லாம் கட்டி வைத்து உடலின் பல பாகங்களிலும் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வார் என்றும் ,அதற்கு மறுத்தால் மின்சாரம் பாய்ச்சி தன்னை கொடுமை செய்து வந்ததாகவும் அப்பெண் புகார் கூறினார் .அவரின் கொடுமை தாங்காமல் தப்பி வந்து போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த ஆர்யா மீது வழக்கு பதிந்து  கைது செய்து ,நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்